எந்தச் சூழலிலும்
சுகந்தம் தரும் விழிகளோடும்
எந்த இறுக்கத்திலும்
சுவாசம் தரும் உயிரோடும்
பின்மாலைப் பொழுதொன்றில்
என் வாழ்க்கையின்
உருவத்தைக் கண்டேன்

பிரமித்து உருகினேன்

கைப்பற்ற நினைத்து
மெல்ல எட்டித் தாவியபோது
விரல்களைச் சுட்டுவிட்டு
ஓடிச்சென்றுவிட்டது துரிதமாக

உயிர் விம்ம
பெரும்பொதித் துக்கம் பின்மூளை பிழிய
வழியற்று விட்டகன்று நகர்கிறேன்

இருள் விழுங்குவதற்குள்
பாதச் சுவடுகளின்
வாசம் வீசுகிறது என் பின்பாக

2 comments:

பூங்குழலி said...

இருள் விழுங்குவதற்குள்
பாதச் சுவடுகளின்
வாசம் வீசுகிறது என் பின்பாக

-- விலகுவதாக பாசாங்கு செய்ததோ ?அருமை

சிவா said...

கைப்பற்ற நினைத்து
மெல்ல எட்டித் தாவியபோது
விரல்களைச் சுட்டுவிட்டு
ஓடிச்சென்றுவிட்டது துரிதமாக


ஹ்ம்ம் :(


அருமை ஆசான்