இந்த
உலகம் அழிந்து
பல கோடி ஆண்டுகள் கழித்து
பின் ஒருநாள் புல் பூண்டுகளெல்லாம்
புதிதாய் முளைத்து அதில்
நானும் பிறந்து நீயும் பிறந்தால்

பிறந்தால் என்ன
நான் பிறந்திருந்தால்
நீயும் நிச்சயம் பிறக்கத்தானே செய்வாய்

சத்தியமாய் நான்
உன் விழிக்குள் விழுந்து
இப்படித்தான் தவியாய்த் தவித்து
துடியாய்த் துடித்து...

4 comments:

தேவன் said...

கவிதை அருமை.


நான் ஒரத்தநாடு தான் ! (ஆனால் அதுக்கு பக்கத்திலே சிறு கிராமம் - கக்கரை) நீங்க எங்க இப்போ இருக்கீங்க புகாரி !!


எனது வலையமைப்பு

www.gnanamethavam.blogspot.com

கலகலப்ரியா said...

அழகான காதல் மற்றும் கவிதை... உங்களோட அனைத்துக் கவிதையும் அற்புதம்!

vasu balaji said...

/சத்தியமாய் நான்
உன் விழிக்குள் விழுந்து
இப்படித்தான் தவியாய்த் தவித்து
துடியாய்த் துடித்து.../

கொள்ளை அழகு புகாரி.

Unknown said...

வருக வருக ஒரத்தநாட்டுக்காரரரே!

நான் கனடாவில் வாழ்கிறேன்