ஒருநாள்
உன்னை வர்ணிக்கும் தாகத்தில்
உனக்கொரு
உவமைதேடிப் புறப்பட்டேன்

என் புறப்பாடு
விரயமாகிவிடுமோ
என்று நான் அஞ்சியபோது
நீயே கிடைத்தாய்
நான் பூரித்துப்போனேன்

காதலிக்கிறேன்
உன்னை எப்போதும்

No comments: