நான்
உன்னைத் தரிசிக்கும்
பொழுதுகளில் மட்டுமே
என் உடலின் இரத்த ஓட்டத்தை
உணர்கின்றேன்

நான்
வருசங்களை
நிமிசங்களாய்க் கணக்கிட்டபோது
நீ என்னருகில் அமர்ந்திருந்தாய்

அன்றொருநாள்
சூரிய விழியை பூமி இமை
மூடிக் கொண்டிருந்தபோது
நம் கண்கள் விழித்திருந்தன
நேருக்கு நேராய்
நினைவுகள் மட்டும் உறங்கிவிட்டன

நாம் விழித்தபோது
என் உன் எனக்கு உனக்கு
என்னுடைய உன்னுடைய
எல்லாம் மறந்தோம்

1 comment:

vasu balaji said...

/நாம் விழித்தபோது
என் உன் எனக்கு உனக்கு
என்னுடைய உன்னுடைய
எல்லாம் மறந்தோம்/

அபாரம்.:)