கூந்தலில் அணியாதே
நான் மலரல்ல
விரல்களில் அணியாதே
நான் மோதிரமல்ல
கழுத்தினில் அணியாதே
நான் ஆரமல்ல
நெஞ்சினில் அணிந்ததோடு
நின்றுவிடாதே
உன் நெருப்பினிலும் அணிந்துகொள்
நான் உயிராவேன்

No comments: