கண்மணி
இது கவிதையா
என்று பாரென்றேன்

வாசித்துச் சிலிர்த்து
இதை எப்போதடா
எழுதினாய் என்றாள்

உனக்காகக் காத்திருந்தேனே
ஒரு நிமிடம்
அது ஒரு நிமிடமல்ல
ஒரு நூறு ஆயுட்காலம்
அத்தனைக் காலத்தையும்
மொத்தமாய் உள்ளடக்கிய
முத்தக் கவிதையடா
செல்லம் இது என்றேன்

எட்டு மடிப்பாக மடித்து
எங்கோ ஓர் சொர்க்கத்தில்
பதுக்கிக்கொண்டாள்

3 comments:

பூங்குழலி said...

ஒரு நிமிடம்
அது ஒரு நிமிடமல்ல
ஒரு நூறு ஆயுட்காலம்
அத்தனைக் காலத்தையும்
மொத்தமாய் உள்ளடக்கிய
முத்தக் கவிதையடா
செல்லம் இது என்றேன்


அருமை

பூங்குழலி said...

ஒரு நிமிடம்
அது ஒரு நிமிடமல்ல
ஒரு நூறு ஆயுட்காலம்
அத்தனைக் காலத்தையும்
மொத்தமாய் உள்ளடக்கிய
முத்தக் கவிதையடா
செல்லம் இது என்றேன்


அருமை

vasu balaji said...

ம்ஹூம். வார்த்தை தேடணும் பாராட்ட.