இமைகள் எரிந்து
காய்ந்து பிளவுபட்டுக்கிடந்த
என் தாக விழிகளில்
ஒரே ஒரு கண்ணீர்த்துளி
விழுந்தது

கருணை நிறைந்த
இதயக் கூட்டிலிருந்து விழுந்தது
அன்பு நிறைந்த
கண் மடியிலிருந்து விழுந்தது
அமுது நிறைந்த
உயிர்க் காம்பிலிருந்து விழுந்தது

அவ்வளவுதான்
என் கசடுகள் அனைத்தையும்
கழுவித் துடைத்து
புத்துயிராய் பெற்றெடுத்தது

அம்மம்மா
இனி நெகிழ்ந்து பரிதவிக்கும்
இந்த உயிர்
அந்த உன் விழிகளுக்கே அர்ப்பணம்

3 comments:

அன்புடன் நான் said...

கவிதை மிக அருமைங்க.

மயூ மனோ (Mayoo Mano) said...

அருமையான கவிதை..

புன்னகையரசன் said...

அருமை அருமை அருமை ஆசான்....