பிரமித்த சிலிர்ப்போடு
உள்நுழைந்த உள்ளக் கொதிப்பை
ஞாபகம் வைத்திருப்பாயா

நெடுயுகத் தாகத்தோடு
தொட்டுத் தடவிய
உயிரின் தவிப்பை மறந்திருப்பாயா

அழகின் ஒளியைவிட
ஏக்கத்தின் கண்ணீரை
நேசித்து நெகிழ்வோனுக்கு
உன்மீது காதல்

உனக்கு?

No comments: