பொன் துகள்கள் உதிர்ந்துபோகுமே
என்ற கவலையில்தான்
கழுத்தில் இறுகும் முடிச்சை
அவிழ்க்காமல் இருந்துவிடுகின்றன
இதயங்கள்

தேவைகளோடு பிறந்த உயிர்கள்
நெருப்பிலேயே கிடப்பது
நியாயமில்லை
அமைதியின்றி அலைவது
பிசாசு வாழ்க்கை
சாந்தமடையும் புள்ளிகளின்றி
இதயக் கோலங்கள்
கலைந்துதான் கிடக்கும்

உன்னைக் கண்டதுமே
திறந்துவிடப்பட்ட காவிரியாகின்றன
கண்கள்
காற்றில் படபடக்கும் தீபங்களைப் போல்
படபடக்கின்றன உணர்வுகள்

என் கோலத்தை
உன் புள்ளிகளில்
கட்டிவைத்துக்கொள்ள
சம்மதமா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

சிவா said...

அட அட அருமை ஆசான்