மீண்டும் என்
விடியல் பறவையின்
கீச்சுக்கீச்சுக் குரல் கேட்டேன்
நெஞ்சில் நீண்டு புலர்ந்த
வெளிச்சக் கீற்றுகளால்
விலகியோடி மறைந்தன இருட்டுகள்

எங்கே பறந்தாயடீ செல்லம்
என்றேன் செல்லமாக
எங்கே சுற்றித் திரிந்தாலும்
பறவையின் சரணாலயம்
வேடந்தாங்கல்தானே என்றது பறவை

இந்தச் சரணாலயத்தின் சரணம் நீ
என் சிறகுகளிலெல்லாம் உன் இறகுகள்
உன் இறகுகளில்தான்
என் உயிர் என்று சொல்லி
முத்தமிட்டேன் உயிரில் உயிரால்

No comments: