ஆயிரம் கண்ணுடையாள் - என்மன
        ஆறுதல் பொன்னுடையாள்

தீவிரச் சொல்லுடையாள் - துயரம்
        தீர்த்திடும் நெஞ்சுடையாள்

தேன்மலர் இதழுடையாள் - கண்ணில்
        தேங்கிடும் கனவுடையாள்

பால்முக ஒளியுடையாள் - என்னுள்
        பாய்கின்ற உயிருடையாள்

1 comment:

சேதுக்கரசி said...

எளிமையான, நல்ல கவிதை :-)