காலமெல்லாம் காத்திருப்பேன்
கடந்தெனைச்செல் வரவேண்டாம்
பாலமொன்று நினைவிலுண்டு
பகலிரவு உடனிருப்பேன்
சேலைமுகில் உன்மடியைச்
சேராமலே சேர்ந்திருப்பேன்
மாலையென்று ஏன் எதற்கு
மனதுனது எனதன்றோ

3 comments:

பூங்குழலி said...

இந்த கவிதையில் சொற்களின் புனைவு ரொம்ப அழகாக இருக்கிறது

சீனா said...

மனதுனது எனதன்றோ - அருமை அருமை புகாரி

ஆயிஷா said...

எப்பவும் ஒட்டியும் ஒட்டாமலுமே உங்க கவிதைகள் ஆசான். அருமை.
அன்புடன் ஆயிஷா