காதலில்
கண்கள் விழவேண்டாம்
இதயம் விழட்டும்
கண்கள் வழியே துடிக்கும்
இதயமல்ல
ஏக்கங்கள் வழியே துடிக்கும்
இதயம்
பருவக் கொதிப்பால் வரும்
ஏக்கமல்ல
பழகும் சுகத்தால் வரும்
ஏக்கம்
காமத் தொடுதல்களால் வரும்
பழகுசுகமல்ல
இதயத் தொடுதல்களால் வரும்
பழகுசுகம்

8 comments:

சாந்தி said...

ஏக்கங்கள் வழியே
துடிக்கும் இதயத்தால்

நல்ல வரிகள்..

சக்தி said...

அன்பின் நண்பரே புகாரி,

காதலின் புனிதத்தன்மையைப் பகரும் வரிகள்


>> காமத்தொடுதல்களால்
வரும் பழகு சுகத்தாலல்ல
இதயத்தொடுதல்களால்
வரும் பழகு சுகத்தால் >>


வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி

பூங்குழலி said...

உன் காதலை
கண்களால் முடிவு செய்யாதே
இதயத்தால் முடிவுசெய்


விழியில் விழுந்த இதயம் நுழைவது தானே காதல்

ஆயிஷா said...

உன் காதலை
கண்களால் முடிவு செய்யாதே
இதயத்தால் முடிவுசெய்
விழியில் விழுந்த இதயம் நுழைவது தானே காதல்



அவர் விழியில் விழுந்து,
இதயம் நுழைந்து,
உயிரில் கலந்த உறவைப் பற்றியல்லவா கவி பாடுகிறார் பூங்குழலி.
அன்புடன் ஆயிஷா

ஆயிஷா said...

ஆசான்

இதயத்தொடுதல்களால்
வரும் பழகு சுகத்தால்


இவ்வாறானவர்களை இந்தக் காலத்தில் கான்பது அரிது. கவிதைக்கு நன்றி.
அன்புடன் ஆயிஷா

விஷ்ணு said...

அருமை கவிதை அன்பின் புகாரி ....

உண்மை காதலின் உறைவிடத்தை உணர்த்தி விட்டீர்கள் கவிதையில்

விஷ்ணு ...

நிலாமதி said...

இதய தொடுதல்களால் வரும் பழகு சுகத்தால் .........
நல்லருமையான் வரிகள். பாராடுக்கள். உண்மைக்காதலை உணர்த்துகின்றன . தொடருங்கள். நட்புடன் நிலாமதி

புன்னகையரசன் said...

உண்மை காதல் அரிது... உங்கள் கவிதையும்...