திரும்பவே மாட்டாய் என்று
உயிரின் வேர்களிலும் உணர்ந்ததும்
ஆழிப்புயல் மைய ஆழத்தில் சுழன்றன கண்கள்

காதலின் சுகமே கண்ணீர்தான் என்று
வகுப்பெடுத்தது காதல்

இந்தக் கண்ணீருக்குள்தான்
எத்தனை யுகங்களின் அடர்மிகு உணர்வுகள்
வெப்பமாய்க் கொட்டுகிறது
உயிரைக் கரையில்லா நதிகளாக்கி

பிரபஞ்சத்தின் ஒற்றை அதிசயமான
காதல் தராமல் எப்படித்தான் கிடைக்கும்
இந்த அற்புதக் கண்ணீர்

4 comments:

vasu balaji said...

/பிரபஞ்சத்தின் ஒற்றை அதிசயமான
காதல் தராமல் எப்படித்தான் கிடைக்கும்
இந்த அற்புதக் கண்ணீர்/

ஒப்பில்லாத வருணிப்பு. அசத்தல்.

பூங்குழலி said...

இந்தக் கண்ணீருக்குள்தான்
எத்தனை யுகங்களின் அடர்மிகு உணர்வுகள்
வெப்பமாய்க் கொட்டுகிறது
உயிரைக் கரையில்லா நதிகளாக்கி

உயிரைக் கரையில்லா நதிகளாக்கி ....
அருமை

சிவா said...

//திரும்பவே மாட்டாய் என்று
உயிரின் வேர்களிலும் உணர்ந்ததும்
ஆழிப்புயல் மைய ஆழத்தில் சுழன்றன கண்கள்



காதலின் சுகமே கண்ணீர்தான் என்று
வகுப்பெடுத்தது காதல்//

அடிக்கடி நடக்கும்

//இந்தக் கண்ணீருக்குள்தான்
எத்தனை யுகங்களின் அடர்மிகு உணர்வுகள்
வெப்பமாய்க் கொட்டுகிறது
உயிரைக் கரையில்லா நதிகளாக்கி

பிரபஞ்சத்தின் ஒற்றை அதிசயமான
காதல் தராமல் எப்படித்தான் கிடைக்கும்
இந்த அற்புதக் கண்ணீர்//


அருமை ஆசான்

ஆயிஷா said...

பிரபஞ்சத்தின் ஒற்றை அதிசயமான
காதல் தராமல் எப்படித்தான் கிடைக்கும்
இந்த அற்புதக் கண்ணீர்

ஆம். காதலின் காரண்மாக வரும் கண்ணீர் மட்டும் தான் சுகமானது.
ஆயிஷா