அழுதே அறியாத நீ
என் முன் உயிர் கரைய அழுதாய்

அந்த அழுகை
உன்னை உனக்கே அறிமுகம் செய்தது

அந்த அழுகை
உனக்கு நான் யாரென்றும் அறியத் தந்தது

அந்த அழுகை
உனக்குப் புதுப் பிறந்தநாள்

தன்னை இழந்து
முழுதாய் உடைந்து அழுதாய்
இன்னொரு ஜென்மத்துக்குள்
நுழைந்தாய்

நீ எனக்குள் விழுந்தாய்
நம் இதயக் குடுவைகள்
அமுது நிறைக்கப்பெற்றன

நான் உனக்குள் விழுந்தேன்
நம் உள்வெளிகள்
நெகிழ்வுக் கண்ணீரால்
சுத்தம் செய்யப்பட்டன

1 comment:

vasu balaji said...

/நான் உனக்குள் விழுந்தேன்
நம் உள்வெளிகள்
நெகிழ்வுக் கண்ணீரால்
சுத்தம் செய்யப்பட்டன/

அட அட. அற்புதம்.