என் இதய ஆழத்தில்
இரும்பு எழுத்தாணியால்
காதலைப் பொறித்தவளே

உன் பிஞ்சுப் பாதங்கள்
தத்தியோடிய
பசும்புல் வெளிகள்தாம்
இன்று மயானகீதம் பாடும்
வறண்ட பாலைகள்

பூக்களை உதிர்த்துவிட்டு
உன்னை நோக்கி
நம்பிக்கைக் கிளைகளை
ஏந்தி நிற்கும் நான்
இன்று வெறும் பட்டமரம்தான்

இருப்பினும் என் அன்பே
நம்பிக்கை வசந்தங்களில்
நீயே நாயகியாய் வந்து
அசைந்தாடும் பொழுதுகளில்
என்னைமறந்து நான்
பூக்கவே செய்கிறேன்

2 comments:

மயூ மனோ (Mayoo Mano) said...

நம்பிக்கை தான் காதல்.....அருமையான கவி.

சிவா said...

அப்படியே என்னை உரித்து வைத்தார் போல இருக்கிறது உங்கள் கவிதை .. சீக்கிரமே பூத்துவிடுவேன் ஆசான்