உன் மீது எனக்குக்
காதல் இருக்கா இல்லையா என்று
இனியொரு முறை கேட்காதே
இல்லை என்று நான் சொல்லுவதை
கேள்வி கேட்காமல் நம்பு

என்னுடனேயே நீ
எப்போதும் இருக்க வேண்டும்
நீ பேசப்பேச நான் பூரிக்கவேண்டும்
உன்னைப் பார்த்துப்பார்த்து
நான் பிரகாசிக்க வேண்டும்
கனவுகளில் தினம்
காணாமல் போகவேண்டும்
நீயும் என்னையே எப்போதும்
நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்

அதைத்தவிர வேறு எதையும்
என்னிடம் கேட்டுவைக்காதே
என் பொய்க்கோபத்துக்கு ஆளாகாதே
உன் மீது என்னால்
உண்மைக் கோபப்பட முடியாது
மீண்டும் ஏன் என்று கேட்காதே
அது அப்படித்தான்

நாம் இறக்கும் வரை
ஒருவரை ஒருவர் பிரியாதிருக்க வேண்டும்
பிரிந்தால் நான் இறந்தே விடுவேன்
முட்டாளே

2 comments:

ஆயிஷா said...

இப்படி ஒரு அன்பான கணவர் கிடைத்தது உங்க மனைவி செய்த புண்ணியமே.
அன்புடன் ஆயிஷா

புன்னகையரசன் said...

யார் முட்டாள் ஆசான்....

எனக்கு நாமதானு தோணுது....